அன்னையின் பெருமை:
- காணாமல் காதல் கொள்பவள் அன்னை மட்டுமே!!!
- கஷ்டத்தை காணாமல் பார்த்து கொள்ளும் உண்ணதமான ஒரே உயிர் "அன்னை"
- தன் பசி பராமல் மற்றவர் பசியை போகும் உள்ளம் கொண்டவள் அன்னை...
- தானத்திற்கு பிறகு தான் தனக்குன்னு நினைக்கும் உள்ளம் உடையவள் தான் அன்னை...
- கண்கள் கலங்காமல் விழி மூடாமல் பார்த்து கொள்ளும் உறவு அன்னை உறவு....
- தன் தூக்கம் கலைந்து தூங்க வைப்பவள் அன்னை...
- என்னை காணமல் உறங்காமல் இருக்கும் ஒரே உறவு என் அன்னை மட்டுமே...
- என் வாழ்வுக்காக என் வாழ்வையே அர்பனித்தவள் அன்னை ஒருவளே...
- தோல்விலும் அரவணைப்பு மட்டும் அல்லாமல் தன்னம்பிக்கை கொடுப்பவள் அன்னை...
அன்னைக்காக சில மணித்துளிகள்:
- கடவுளே உறங்காத படுக்கை தாயின் கருவறை...
- என் கண்கள் கலங்கினால் அவள்(அன்னை) இதயம் நின்று விடும்..
- என் பசி கண்டால் அவள்(அன்னை) பசி நின்று விடும்..
- கவலையை மறந்து 60வது வயதிலும் குழந்தையாய் மாறும் இடம் அன்னை மடி...
- அனைத்தும் மறந்து உறங்கினாலும் உறங்கிய இடம் மட்டும் மறக்காமல் மனதை வருகின்றன...
- ஆயிரம் ஐய்யாயிராம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன்(அன்னை) உறவை மட்டும் மனம் தேடுகின்றன...
- என்னிடம் தோற்கும் தோல்வியை கூட புன்னகையோடு முகம் காட்டும் உன் அன்புக்கு இவ்வுலகமே அடிமை அம்மா!!!
- ஒவ்வொரு வீட்டிலும் தட்சணை இல்லாமல் தரிசனம் தரும் கடவுள் அன்னை!!!!
என் அன்னையே
"10-திங்கள் என் குரல் கேக்காமல் என் அசைவோடு உரையடினாய், என் அசைவில் உன் உயிரை அனு கணமும் கொன்றவன் நான் இருந்தும், தவமாய் தவம் இன்றி பக்குவமாய் ஈன்றாய் என்னை, ஈன்ற கணம் முதல் என்னை ஈ,எறும்பு அண்டாமல் உன் கண் விழித்து என்னை விடியும் வரை உறங்க வைத்து உன் துக்கம் மறந்தாய்,, என் அழுகை குரலை கேட்டதும் உள்ளம் பதற என்னை காண ஓட்டம் எடுத்தாய், என் பசிக்காக உன் பசியை பறக்க விட்டாய்,, நான் கஷ்டம் காண கூடாது என்று நீ அயராது கஷ்டபட்டாய்,, என் விருபத்திற்கு ஏற்ப உன் விருப்பதை மாற்றி கொண்டாய்,, என் வாழ்வுக்காக உன் வாழ்வை அர்பனைத்தாய்,, நான் தந்த கவலை,கஷ்டங்கள் அனைத்தையும் புன்னகையோடு நீ ஏற்று கொண்டாய், என் தொல்லைகள் அனைத்தையும் துன்பம் காணமல் இன்பமாக ஏற்றாய்,,என் மகிழ்வை காண உன் மகிழ்வை துளைத்து எனக்காக வாழ்ந்தாய்..."
"எல்லாம் தனக்குன்னு இல்லமால் என்னக்குனு செய்தாய்" எல்லாம் அறிந்தும் இன்றும் உனக்கு தொல்லை பிள்ளையாய் இருக்கிறேன்... உன் அன்புக்கு பரிசளிக்க இவ்வுலகில் இடாக ஏதும் இல்லை அன்னையே!!! உன் அன்பை விவரிக்க 246 வார்த்தைகள் போதாது!!! உன் அன்பில் நினைய ஒரு ஜென்மம் போதாது அன்னையே!!!
உன்னை மகிழ்வோட காண அடுத்த பிறவியில் நான் உனக்கு அன்னையாக வேண்டும் அன்னையே😔இன்று மட்டும் அல்ல நீ மகிழ்வோடு இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு அன்னையர் தினம் தன் அம்மா!!!....
I Love You Mom
இன்றும் என்றும் உன் தொல்ல பிள்ளையின் வரிகளே இவை...
3 comments:
amma post ok but
sema anna
Apdiye Itha poi unga amma kita solunga
Post a Comment